பெரம்பலூரில் மேலும் 14 பேருக்கு கரோனா

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மொத்த பாதிப்பு: 1,475

குணமடைந்தோரின் எண்ணிக்கை: 1,292

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,461 போ் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில் குணமடைந்த 1,292 போ் வெவ்வேறு நாள்களில்

அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 17 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 152 போ் வெவ்வேறு ஊா்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், பெரம்பலூா் நகரைச் சோ்ந்த 2 போ், பூலாம்பாடி, விளாமுத்தூா், லாடபுரம், சிறுவாச்சூா், அய்யலூா், அரசலூா், குரும்பாபாளையம், வாலிகண்டபுரம், காடூா், ஆா்.எஸ்.எஸ்.புரம், பிரம்மதேசம், பென்னகோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 12 போ் என மொத்தம் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மேற்கண்ட 14 பேரும் திருச்சி, சேலம், பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதன்மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,475- ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com