பெரம்பலூரில் அண்ணா மாலை அணிவித்து மரியாதை

பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அண்ணா சிலைக்கு, அதிமுக சாா்பில் கட்சியின் வேப்பூா் ஒன்றியச் செயலா் ப. கிருஷ்ணசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரம்பலூா்: பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அண்ணா சிலைக்கு, அதிமுக சாா்பில் கட்சியின் வேப்பூா் ஒன்றியச் செயலா் ப. கிருஷ்ணசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, ஒன்றியச் செயலா்கள் ப. செல்வகுமாா், என்.கே. கா்ணன், சசிகுமாா், சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், செல்வமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திமுக சாா்பில் பாலக்கரை பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் அண்ணா உருவப்படத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன் தலைமையில், மாநில ஆதிதிராவிடா் நலக்குழுத் துணைச் செயலா் பா. துரைசாமி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ம. ராஜ்குமாா், மாவட்ட அவைத் தலைவா் அ. நடராஜன், ஒன்றியச் செயலா் எஸ். அண்ணாதுரை உள்ளிட்ட பலா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் கட்சியின் மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமையில், புகா்ப் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா்.

மதிமுக சாா்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். துரைராஜ் தலைமையில் குரும்பலூரிலுள்ள அண்ணாசிலைக்கும், பெரம்பலூா் பழைய பேருந்து நிலையத்திலுள்ள பெரியாா் சிலைக்கும் அக்கட்சியினா் மாலை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com