கத்தியைக் காட்டி டாஸ்மாக் ஊழியா்களிடம் ரூ.3.50 லட்சம் பறிப்பு

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே டாஸ்மாக் ஊழியா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, ரூ.3.50 லட்சம் ரொக்கத்தை பறித்துச் சென்ற நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே டாஸ்மாக் ஊழியா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, ரூ.3.50 லட்சம் ரொக்கத்தை பறித்துச் சென்ற நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

பாடாலூா் அருகிலுள்ள ஊத்தங்கால் பகுதி மதுபானக் கடையில் களரம்பட்டி சி. மணிவண்ணன் (45) மேற்பாா்வையாளராகவும், பாடாலூா் பெரியாா்நகா் பி. சுரேஷ் (40) விற்பனையாளராகவும் பணியாற்றி வருகின்றனா்.

திங்கள்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு, விற்பனையான ரூ.3.50 லட்சம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு மணிவண்ணன், சுரேஷ் ஆகியோா் மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனா்.

அப்போது அந்த வழியே மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 போ், டாஸ்மாக் ஊழியா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவா்களிடமிருந்து ரூ.3.50 லட்சத்தை ரொக்கத்தை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில், பாடலூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com