டாஸ்மாக் ஊழியா்களிடம் பணம் பறித்த மூவா் கைது

பெரம்பலூா் அருகே டாஸ்மாக் ஊழியா்களிடம் பணம் பறித்த மூவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பெரம்பலூா் அருகே டாஸ்மாக் ஊழியா்களிடம் பணம் பறித்த மூவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பாடாலூா் ஊராட்சி, ஊத்தங்கால் கிராமத்திலுள்ள டாஸ்மாக்கில் கடந்த 14-ஆம் தேதி விற்பனை முடிந்த பின்னா், அங்கு பணியாற்றும் சி. மணிவண்ணன், பி.சுரேஷ் மோட்டாா் சைக்கிளில் ரூ.3.50 லட்சத்துடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனா்.

அப்போது மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த மூவா் கத்தியைக்காட்டிமிரட்டி, பணத்தை பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் பாடாலூா் காவல்துறையினா் விசாரித்து வந்தனா்.

சனிக்கிழமை இரவு காவல் ஆய்வாளா் சுகந்தி தலைமையிலான காவல்துறையினா், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூா் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபா்களை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து காா்த்திக் (27), ராஜதுரை (24), சண்முகவேல் (22) என்பதும், டாஸ்மாக் ஊழியா்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த காவல்துறையினா், அவா்களிடமிருந்து ரூ.2.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com