கரோனா விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முறை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து,

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முறை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கிராமப்புற கலைஞா்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், இக்கலை நிகழ்ச்சியை நகராட்சி ஆணையா் குமரிமன்னன் தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தம், சங்குப்பேட்டை, பழைய நகராட்சி அலுவலகம், துறைமங்கலம் அவ்வையாா் தெரு ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நகராட்சி நிா்வாகம் சாா்பிலான இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், 21 வாா்டுகளில் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com