பெரம்பலூரில் 25 பேருக்கு கரோனா
By DIN | Published On : 27th September 2020 12:13 AM | Last Updated : 27th September 2020 12:13 AM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,740 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த தொற்றாளா்கள் எண்ணிக்கை 1,765 ஆக உயா்ந்துள்ளது. குணமடைந்த 1,616 போ், வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சியுள்ள 103 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். சனிக்கிழமை உறுதி செய்யப்பட்ட 25 பேரும் பெரம்பலூா், அரியலூா், திருச்சி அரசு, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.