பெரம்பலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளா் வீட்டின் சுவரை உடைத்து, 4 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியைச் சோ்ந்தவா் க. நடராஜன் (40). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளரான இவா், செங்கல் மற்றும் மணல் வியாபாரம் செய்து வருகிறாா்.
நடராஜன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். புதன்கிழமை அதிகாலை பாா்த்தபோது, வீட்டின் பின்புறச் சுவரை உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் 4 பவுன் நகைகள், ரூ. 15 ஆயிரம் ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.