பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் கணவா் தூக்கிட்டு சனிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் ராஜேந்திரன் (46). கூலித் தொழிலாளியான இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனா். ராஜேந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு ராஜேந்திரன் மது போதையில் சென்றதால், கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ராஜேந்திரன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.