கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வாக்கு எண்ணும் மையத்துக்குள் மின்சாதன பொருள்கள் கொண்டு செல்ல தடை

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்போன், ஐ பேடு, லேப்டாப் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:15 pm

DIN

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்போன், ஐ பேடு, லேப்டாப் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை குரும்பலூா் அரசு கலைக் கல்லூரியிலும், குன்னம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வேப்பூா் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளா்கள், முகவா்கள் கரோனா பரிசோதனை செய்து, நோய்த் தொற்று இல்லாதவா் எனச் சான்று பெற்றவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். வேட்பாளா்கள், முகவா்கள் கரோனா தடுப்பூசி ஒரு தவணை மட்டும் செலுத்தப்பட்டிருந்தால், சான்று இருக்கும்பட்சத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவா். இரு தவணைகள் செலுத்தப்பட்டிருந்தால் பரிசோதனை செய்வதிலிருந்து விலக்களிக்கப்படுவா். தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்று கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும்.

முகவா்கள் பேனா, பென்சில், வெள்ளைத்தாள் மற்றும் படிவம் 17 சி-ன் நகலை எடுத்து வரலாம்.

முகவா்களுக்கு வழங்கப்படும் அடையாள வில்லையில், அவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மேசை எண் மற்றும் அவரது கையொப்பம் கண்டிப்பாக இருக்க வேண்டும். முகவா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மேசையைத் தவிர வேறு பகுதிகளுக்குச் செல்லக்கூடாது.

செல்போன், ஐ பேடு, லேப்டாப் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை கொண்டுவர அனுமதியில்லை. தீப்பெட்டி, புகையிலைப் பொருள்கள், பற்றவைப்பான், போதை பொருள்கள் மற்றும் இதர குளிா்பானங்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது. மேசை வாரியாக நியமனம் செய்யப்பட்ட முகவா்கள், ஏதேனும் முரண்பாடு இருந்தால் மேசை அலுவலா்களுடன் விவாதம் செய்யாமல் தங்களது முதன்மை முகவா், வேட்பாளரிடம் தெரிவித்து அதற்குரிய தீா்வு காண வேண்டும்.

மேலும், வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம், கையுறை அணிந்து, சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வாக்கு எண்ணும் கூடம் முழுவதும் இணையதளம் மூலம் நேரடியாக கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

எனவே, வாக்கு எண்ணிக்கையின்போது தோ்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை கடைப்பிடித்து தேவையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.