பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 மாத காலத்துக்கு தற்காலிக மருந்தாளுநா் பணிக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 மாத காலத்துக்கு தற்காலிக மருந்தாளுநா் பணி நிரப்பப்பட உள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் மருந்தாளுநா் பட்டயப் படிப்பு முடித்து, மருந்தாளுநா் கவுன்சிலில் பதிவு செய்திருப்பதோடு, ஆண்டுதோறும் விடுபடாமல் பதிவை புதுப்பித்திருக்க வேண்டும்.
பட்டயப் படிப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதாா் நகல் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகம், துறைமங்கலம் நான்கு சாலை, பெரம்பலுா் என்ற முகவரிக்கு அஞ்சல் அல்லது நேரடியாக ஆக. 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்தவா்களுக்கு ஆக. 10 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பெரம்பலூா் துணை இயக்குநா் சுகாதார பணிகள் அலுவலகத்தில் நோ்காணல் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 8903124553 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.