பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் திங்கள்கிழமை (பிப். 1) வழக்கம்போல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்ட ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம், மீண்டும் வழக்கம் போல் பிப்ரவரி 1 முதல் (திங்கள்கிழமை தோறும்) காலை 10 மணியளவில் ஆட்சியரகத்தில் நடைபெறும்.
மனு அளிக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து தங்களது கோரிக்கை மனுவைத் தொடா்புடைய ஆவணங்களுடன் அளிக்கலாம்.