பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள காவல் உட்கோட்டங்களில் பொதுமக்கள் புகாா் மனு மீது தீா்வு காணும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில், பெரம்பலூா், பாடாலூா், மருவத்தூா், குன்னம், மங்கலமேடு, கை.களத்தூா், வி.களத்தூா், அரும்பாவூா் ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ள குடும்பப் பிரச்னை, இடப்பிரச்னை, குற்ற வழக்குகளில் தொடா்புடைய மனுதாரா்கள், எதிா் மனுதாரா்களிடையே பேசி வழக்குகள் தீா்த்து வைக்கப்பட்டன.
இந்த முகாமில் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து 116 மனுக்களை பெற்றனா். இதில், 107 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. எஞ்சியுள்ள 9 மனுக்கள் விசாரணையில் உள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.