பெரம்பலூரில் சுகாதார ஆய்வாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

பெரம்பலூரில் சுகாதார ஆய்வாளா்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பெரம்பலூரில் சுகாதார ஆய்வாளா்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அரசு அனைத்து சுகாதார ஆய்வாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், பெரம்பலூா் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜ்மோகன் தலைமை வகித்தாா்.

சென்னையில் சுகாதாரத்துறை இயக்குநரகம் எதிரே திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 1,646 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

தற்காலிக சுகாதார துறை ஆய்வாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com