பெரம்பலூா் பாலக்கரை அருகே தொடங்கிய மனிதச்சங்கிலிப் போராட்டத்துக்கு, பாரதியஜனதா கட்சியின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா்.
மாநில இணைப் பொருளாளா் எம். சுப்பிரமணியம், முன்னாள் மாவட்டத் தலைவா் சந்திரசேகா், கல்வியாளா் பிரிவு மாவட்ட இணைச் செயலா் உமா ஹைமாவதி உள்ளிட்ட பலா் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்றனா்.