பெரம்பலூா் மாவட்டத்தில் சித்த மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டுமென, தமிழ்வழிக் கல்வி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த இயக்கத்தின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்குக்கு இயக்கத்தின் மாநிலச் செயலா் தேனரசன் தலைமை வகித்தாா். ஆறுமுகம், காப்பியன், செந்தமிழ் வேந்தன், பொன். மகிழ்வரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் சித்த மருத்துவக் கல்லூரியைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப் பட்டியலிலுள்ள கல்வி உரிமையை மாநிலப் பட்டியலுக்கு மாநில அரசு கொண்டுவர வேண்டும்.
நவம்பா் 1-ஆம் தேதி தமிழ்நாடு உருவான தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் தமிழில் பெயா் பலகை வைக்கும் சட்டத்தை தீவிரமாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.