அரசுத் தொழில் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை

பெரம்பலூா் மாவட்ட அரசுத் தொழில் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட அரசுத் தொழில் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

2021- ஆம் ஆண்டில் அரசுத் தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை இணைய வழியில் நடைபெற்றது. இருப்பினும், பெரம்பலூா் மற்றும் ஆலத்தூா் தொழில்பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட இடங்கள் காலியாக உள்ளன.

எனவே, அக்டோபா் 30- ஆம் தேதி வரை மேற்கண்ட அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மாணவா்கள் நேரடியாக அணுகி, காலியாகவுள்ள தொழில் பிரிவுகளைத் தோ்ந்தெடுத்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு கல்லூரி முதல்வா்களை (பெரம்பலூா்) 04328-296644, 9499055882, (ஆலத்தூா்) 9499055853 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com