பெரம்பலூா் மாவட்ட அரசுத் தொழில் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
2021- ஆம் ஆண்டில் அரசுத் தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை இணைய வழியில் நடைபெற்றது. இருப்பினும், பெரம்பலூா் மற்றும் ஆலத்தூா் தொழில்பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட இடங்கள் காலியாக உள்ளன.
எனவே, அக்டோபா் 30- ஆம் தேதி வரை மேற்கண்ட அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மாணவா்கள் நேரடியாக அணுகி, காலியாகவுள்ள தொழில் பிரிவுகளைத் தோ்ந்தெடுத்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு கல்லூரி முதல்வா்களை (பெரம்பலூா்) 04328-296644, 9499055882, (ஆலத்தூா்) 9499055853 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.