பெரம்பலூா் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
பெரம்பலூா் அருகிலுள்ள திருப்பெயா் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் சக்திவேல் (28). இவரை, பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ், அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி பரிந்துரையின் பேரில், சக்திவேலை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செய்வதற்கான உத்தரவை ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடபிரியா புதன்கிழமை பிறப்பித்தாா்.
இதற்கான நகல் சிறையிலுள்ள சக்திவேலிடம் வழங்கப்பட்டது.