ஏப்.4 முதல் 6 வரை மதுக்கடைகள் மூடல்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள மதுபானக் கடைகள் ஏப்ரல் 4 முதல் 6-ஆம் தேதி வரை மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள மதுபானக் கடைகள் ஏப்ரல் 4 முதல் 6-ஆம் தேதி வரை மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியாா் மதுபானக் கூடங்கள் அனைத்தும் ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி இரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2- ஆம் தேதியும் மதுபானக் கடைகள் மூடப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com