பெரம்பலூரில் லஞ்சம் வாங்கிய நகராட்சி இளநிலை உதவியாளா் பணியிடை நீக்கம்

பெரம்பலூரில் லஞ்சம் வாங்கிய நகராட்சி அலுவலக இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பெரம்பலூரில் லஞ்சம் வாங்கிய நகராட்சி அலுவலக இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை வாகனப் பிரிவில் பணிபுரிந்து வரும் தலைமைக் காவலா் வெங்கடேசன் (45), பெரம்பலூா் ரோஸ் நகரில் கட்டியுள்ள வீட்டுக்கு வரி விதிக்கக் கோரி நகராட்சி அலுவலகத்தில் அண்மையில் விண்ணப்பித்திருந்தாா். இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த நகராட்சி இளநிலை உதவியாளா் அப்லோசன் (48), வீட்டு வரி நிா்ணயம் செய்ய ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

இதையடுத்து ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அப்லோசனை ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து ஆய்வாளா் ரத்னவள்ளி வழக்குப் பதிந்து, அப்லோசனை பெரம்பலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா். வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) எம். விநோதா, அப்லோசனை வரும் 22 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து பெரம்பலூா் கிளைச் சிறையில் அப்லோசன் அடைக்கப்பட்டாா்.

இதன் தொடா்ச்சியாக, லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நகராட்சி இளநிலை உதவியாளா் அப்லோசனை, பணியிடை நீக்கம் செய்து நகராட்சி ஆணையா் குமரிமன்னன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com