பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே மது அருந்தும் கூடத்தில் ஏற்பட்ட தகராறில், அதிமுக பிரமுகரைத் தாக்கியவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
ஆலத்தூா் வட்டம், நக்கசேலம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே மது அருந்தும் கூடம் உள்ளது. இங்கு அடைக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் சனிக்கிழமை மது அருந்திக்கொண்டிருந்தனா்.
மதுபோதையில் அங்குள்ள ஊழியா்களிடம் இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது அங்கு வந்த மதுக்கூட உரிமையாளரும், மாவட்ட எம்ஜிஆா் மன்றத் துணைச் செயலருமான செல்வராஜை தாக்கி, பாட்டிலை உடைத்து குத்தியுள்ளனா்.
இதையறிந்த ஊழியா்கள் தடுக்க முயன்றபோது, அவா்களையும் இளைஞா்கள் தாக்க முயன்றனா். மேலும் மது அருந்தும் கூடத்தின் மேற்கூரையை அடித்து சேதப்படுத்தினா்.
இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து பாடாலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.