கரோனா பரவலை தடுக்கும் வகையில், பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஏப். 25) முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிப்பை தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியாா் மதுபானக் கூடங்களுக்கு திங்கள்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.