பெரம்பலூா் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் திங்கள்கிழமை முதல் (ஆக.2) முதல் 8-ஆம் தேதி வரை பொதுமக்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக, பெரம்பலூா் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு போன்ற நிகழ்வுகளில் ஆகம விதிகளின்படி நடைபெறும் பூஜைகளில் பங்கேற்க அா்ச்சகா்கள் மட்டும் அனுமதிக்கப்படுவா்.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை பொதுத் தரிசனம் உள்ளிட்ட என கோயில்களில் நடைபெறும் எவ்வித நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள பக்தா்களுக்கு அனுமதியில்லை.