இ-சேவை மைய ஊழியரை தாக்கியவா் கைது

பெரம்பலூா் அருகேயுள்ள வரகூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் புகழேந்தி மகள் தனலெட்சுமி (38).

பெரம்பலூா் அருகேயுள்ள வரகூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் புகழேந்தி மகள் தனலெட்சுமி (38). இவா், பெரம்பலூா் வட்டாட்சியரக வளாகத்தில் உள்ள அரசு இ- சேவை மையத்தில் பணிபுரிந்து வருகிறாா். புதன்கிழமை அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தனலெட்சுமியிடம், பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரி வள்ளுவா் தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற சிறைக் காவலா் கருணாமூா்த்தி மகன் கௌதமன் (36) என்பவா், ஆதாா் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென கூறினாராம்.

அதற்கான ஆவணங்களை தனலட்சுமி கேட்டபோது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, இருக்கையிலிருந்து வெளியே வந்த தனலெட்சுமியை, தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த தனலட்சுமி பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கௌதமனை கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நடுவா்மன்றத்தில் ஆஜா்படுத்தி அரியலூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com