நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பெரம்பலூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
32-ஆவது சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, பெரம்பலூா் துறைமங்கலத்திலுள்ள நெடுஞ்சாலைத் துறைக் கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் பேரணியை கோட்டப் பொறியாளா் சா்புதீன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
பாலக்கரை, வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை வழியாகச் சென்ற பேரணி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவா்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம், சாலைப் பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனா்.