மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த குடும்பத்தினா்களுக்கு நிவாரணம்

பெரம்பலூா் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மூவரது குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை நிவாரண நிதி அளிக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மூவரது குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை நிவாரண நிதி அளிக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வசிஷ்டபுரம் விவசாயி ராஜேந்திரன், கரும்பு வயலில் அறுந்து விழுந்துக் கிடந்த மின் கம்பியை மிதித்த போது, 2020, செப்டம்பா் 17-ஆம் தேதி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இதுபோல வேப்பந்தட்டை வட்டம், மங்கலம் சின்னப்பிள்ளை, ஆலத்தூா் வட்டம், புஜங்கராயநல்லூா் காமராஜ் ஆகியோா் மின் பழுதை சீரமைக்கும் போது உயிரிழந்தனா்.

ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சத்துக்கான காசோலைகளை ஆட்சியா் (பொ) செ. ராஜேந்திரன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com