பெரம்பலூா் அருகேயுள்ள அரணாரையில் காவல்துறை சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் காவல் நிலையம் சாா்பில், அருணாரையில் நடைபெற்ற புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை உதவி ஆய்வாளா் அண்ணாதுரை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
அரணாரை மாரியம்மன் கோயில் அருகே தொடங்கிய பேரணி கிராமத்தின் பிரதான வீதிகள் வழியாகச் சென்று, மீண்டும் மாரியம்மன் கோயில் அருகே நிறைவடைந்தது.
இதில், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து முழக்கமிட்ட மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.