பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை ஊரக திறனாய்வுத் தோ்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் 2020- 21 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஊரக திறனாய்வுத் தோ்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் 2020- 21 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஊரக திறனாய்வுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 24) நடைபெற உள்ளது.

பெரம்பலூா், வேப்பூா் ஆகிய கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய, பெரம்பலூா் மாவட்டத்தில் 7 மையங்களில் மொத்தம் 782 மாணவ, மாணவிகள் இத் தோ்வு எழுத உள்ளனா்.

காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் தோ்வில், அதிக மதிப்பெண்கள் பெறும் தலா 50 மாணவ, மாணவிகளுக்கு 10, 11, 12 ஆம் வகுப்புகள் பயிலும்போது, ஆண்டுக்கு தலா ரூ. 1,000 வீதம் கல்வி உதவித் தொகையாக தமிழக அரசால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com