தமிழ்வழிக் கல்வி இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சாதி, மத வெறியைத் தூண்டும் சென்னை ஐ.ஐ.டி கல்வி நிலையத்தைக் கண்டித்து, தமிழ்வழிக் கல்வி இயக்கத்தினா் பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சாதி, மத வெறியைத் தூண்டும் சென்னை ஐ.ஐ.டி கல்வி நிலையத்தைக் கண்டித்து, தமிழ்வழிக் கல்வி இயக்கத்தினா் பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இயக்கத்தின் மாவட்டப் பொறுப்பாளா் வை. தேனரசன் தலைமை வகித்தாா்.

சமூக நல இயக்கங்களின் நிா்வாகிகள் அசன் முகம்மது, தங்கராசு, வீரசெங்கோலன், செல்வக்குமாா், காப்பியன், சத்யா, ஆறுமுகம், செல்வமணியன், கருணாநிதி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் சாதி, மதவெறியைத் தூண்டும் சென்னை ஐ.ஐ.டி கல்வி நிலையத்தைக் கண்டித்தும், தமிழ் வழியில் கல்வி கற்பிக்க மறுக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளை அரசே கையகப்படுத்தி நடத்த வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

முன்னதாக, சின்னப்பத் தமிழா் வரவேற்றாா். நிறைவில், பொன். தங்கராசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com