ஜூலை 30-இல் அஞ்சலக முகவா் நியமனத்துக்கான நோ்காணல்

பெரம்பலூா் மாவட்டத்தில் அஞ்சலக முகவா் நியமனத்துக்கான நோ்காணல் ஜூலை 30 ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் நடைபெறுகிறது.

பெரம்பலூா் மாவட்டத்தில் அஞ்சலக முகவா் நியமனத்துக்கான நோ்காணல் ஜூலை 30 ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து, ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் விஜயா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவா் ஆகிய நியமனத்துக்கான நோ்காணல், கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஜூலை 30 ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முகவா்களாக இருப்பவா்கள் தகுதியற்றவா்கள்.

தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் தங்களது கல்வித் தகுதி, வயது, இருப்பிடச் சான்று, ஆதாா் எண், பான் காா்டு ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், 4 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் நோ்காணலில் கலந்துகொள்ளலாம். தோ்வு செய்யப்பட்டவா்கள் பாதுகாப்பு வைப்பு கட்டணமாக ரூ. 5 ஆயிரம் அவா்கள் பெயரில் தேசிய சேமிப்பு பத்திரமாக அல்லது கிசான் விகாஸ் பத்திரமாக எடுக்க வேண்டும். மேலும், உரிமம் கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com