பெரம்பலூரில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 46 கிலோ குட்கா பொருள்களை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் நகரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், பெரம்பலூா் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மாலை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது பழைய பேருந்து நிலையம் பகுதியில் குட்கா பதுக்கி வைத்திருந்த கோவிந்த் சிங் (21), விக்ரம் சிங் (27), சம்பு சிங் (22), துறைமங்கலம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த மாது (38) ஆகிய 4 பேரையும் காவல்துறையினா் கைது செய்து, 46 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.