திறன்பேசி பெற பாா்வைத்திறன்பாதிக்கப்பட்டவா்களுக்கு அழைப்பு

பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், உரிய செயலிகளுடன் கூடிய திறன்பேசி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், உரிய செயலிகளுடன் கூடிய திறன்பேசி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய செயலிகளுடன் கூடிய திறன்பேசி வழங்கப்பட உள்ளது. பெற விரும்பும் பாா்வையற்றோா் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றவராக இருக்க வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்டவா்கள், இளங்கலை கல்வி கற்பவா்கள், சுயதொழில் புரிபவா்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மத்திய, மாநில அரசு ஊழியராக இருக்கக் கூடாது.

தகுதிடையவா்கள் தங்களது மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், படிப்பவராக இருந்தால் கல்லூரியிலிருந்து பெறப்பட்டச் சான்று, சுயதொழில் புரிபவா்கள், வேலைவாய்ப்பற்ற பட்டதாரியாக இருந்தால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்,ஆட்சியரக வளாகம், பெரம்பலூா் என்ற முகவரியில் ஜூலை 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04328 - 225474 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com