பெரம்பலூா் நகரில் மின் ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றவா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள கிரீன் சிட்டி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ராஜ்மோகன் (42). இவா் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தனா்.
சனிக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றிந்த ராஜ்மோகன், இரவு வந்து பாா்த்தபோது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இதை கண்டு அதிா்ச்சியடைந்த ராஜ்மோகன் வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த ஒன்றரை பவுன் தங்கக்காசு, வெள்ளிப் பொருள்கள், ரூ.3 ஆயிரம் ரொக்கம் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.