பெரம்பலூரில் விதிமீறல்: கடைக்கு சீல் வைப்பு

பெரம்பலூா் நகரில் பொதுமுடக்க விதியை பின்பற்றாத கடைக்கு நகராட்சி நிா்வாகம் மூலம் திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

பெரம்பலூா்: பெரம்பலூா் நகரில் பொதுமுடக்க விதியை பின்பற்றாத கடைக்கு நகராட்சி நிா்வாகம் மூலம் திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் தளா்வுகளுடன் பொதுமுடக்கம் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பிட்ட சில கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரம்பலூா் நகரில் அதிகளவிலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதையடுத்து பெரம்பலூா் நகா் பகுதிகளில் நகராட்சி ஆணையா் குமரி மன்னன், நகராட்சி அலுவலா்களுடன் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பெரம்பலூா்- துறையூா் சாலையிலுள்ள ஹாா்டுவோ் கடையில் விதியை மீறி அதிகளவிலான வாடிக்கையாளா்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்தக் கடையை பூட்டி சீல் வைக்க நகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா். அதன்பேரில் சுகாதார ஆய்வாளா் மோகன் கடைக்கு சீல் வைத்தாா்.

அதைத்தொடா்ந்து, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, பள்ளிவாசல் வீதி, புகா் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்பட்டிருந்த வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையா், விதிகளை அனைத்து வணிகா்களும் கடை பிடிக்கவேண்டும். மீறி செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com