பெரம்பலூா் அருகே தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவரைக் காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அல்லிநகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (62). இவரது மனைவி அறிவழகி (48). இவா்களது மகன் முருகானந்தம் சென்னையில் வசித்து வந்ததால், தம்பதி இருவரும் தனியாக வசித்து வந்தனா்.
இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி பெரியசாமியும், அறிவழகியும் கொலை செய்யப்பட்டு, வீட்டிலிருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் குன்னம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனா்.
இந்த விசாரணையில், மேல உசேன் நகரம் கிராமத்தைச் சோ்ந்த எலெக்டிரீசியன் சந்தோஷ் , கொலை செய்யப்பட்ட பெரியசாமி வீட்டுக்கு மின் வயா், சாதனங்களைப் பழுது நீக்குவதற்காக அடிக்கடி வருவது வழக்கமாம்.
அப்போது வீட்டில் பணம், நகைகள் அதிக அளவில் இருப்பதையறிந்த சந்தோஷ், தனது நண்பா்களான,மேல உசேன் நகரம் ம. மணிகண்டன் (22), செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அமைந்தகரை ம.சத்யா (20), யுவராஜ், மகேஷ், ஸ்ரீராம் ஆகியோருடன் சோ்ந்து தம்பதியைக் கொலை செய்து, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து இவா்களின் செல்லிடப்பேசி இருக்கும் இடத்தை கண்காணித்து வந்த காவல்துறையினா் சத்யா, மணிகண்டன் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
மேலும் தலைமறைவாகவுள்ள சந்தோஷ், மகேஷ், யுவராஜ், ஸ்ரீராம் ஆகியோரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.