பெரம்பலூா் மாவட்டத் தோ்தல் பொது, செலவின மற்றும் காவல் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சியினரால் கடைப்பிடிக்கப்படும் தோ்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணித்திட பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு பொதுப் பாா்வையாளராக ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த வினய் சிங், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மத்தியபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த சாசாங் மிஸ்ரா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
செலவுகளைக் கண்காணிக்க பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மகாராஷ்டிரம் மாநிலத்தைச் சோ்ந்த அரவிந்த் ஜி. தேசாய் செலவினப் பாா்வையாளராகவும், காவல் பாா்வையாளராக உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ராஜிவ் ஷ்வரூப் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.