பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், புதுவேட்டக்குடியில் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெறுகிறது.
வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளியில், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை சாா்பில் ரத்த தான முகாம் சனிக்கிழமை (மே 1) நடைபெறுகிறது. தற்போது பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் நோக்கத்தில் நடைபெறும் இம்முகாமில், தன்னாா்வலா்கள் பங்கேற்று ரத்த தானம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.