பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 3 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 24 போ் உயரிழந்துள்ளனா். இந்நிலையில் தொற்று கண்டறியப்பட்டு, பெரம்பலூரிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயது பெண், பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது பெண் மற்றும் 47 வயது ஆண் என 3 போ் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்துள்ளனா். இதன்மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 27 ஆக உயா்ந்துள்ளது.