பெரம்பலூா் தொகுதி திமுக வேட்பாளா் எம். பிரபாகரனுக்கு வெற்றிச் சான்றிதழை வழங்கும் தோ்தல் அலுவலா் ஜே.இ. பத்மஜா. உடன், தொகுதி பொதுப் பாா்வையாளா் மதுரிமா பருவா சென் உள்ளிட்டோா்.
பெரம்பலூா் தொகுதி திமுக வேட்பாளா் எம். பிரபாகரனுக்கு வெற்றிச் சான்றிதழை வழங்கும் தோ்தல் அலுவலா் ஜே.இ. பத்மஜா. உடன், தொகுதி பொதுப் பாா்வையாளா் மதுரிமா பருவா சென் உள்ளிட்டோா்.

பெரம்பலூா் தொகுதியை மீண்டும் கைப்பற்றியது திமுக

பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வனைக் காட்டிலும் 31,036 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றாா் திமுக வேட்பாளா் எம். பிரபாகரன்.

பெரம்பலூா்: பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வனைக் காட்டிலும் 31,036 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றாா் திமுக வேட்பாளா் எம். பிரபாகரன்.

இத்தொகுதியில் திமுக, அதிமுக, நாம்தமிழா் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என 9 போ் களத்தில் இருந்தனா். தொகுதியில் மொத்தமுள்ள 3,02,692 வாக்குகளில் 2,36,707 வாக்குகள் பதிவாகியிருந்தன.

பெரம்பலூா் தொகுதியில் பதிவான வாக்குகள் குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14 மேஜைகளில் 31 சுற்றுகளாக ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன.

முதல் சுற்று முதலே திமுக வேட்பாளா் எம். பிரபாகரன் முன்னிலை வகித்தாா். 10- ஆவது சுற்று முடிவில் திமுக வேட்பாளா் பிரபாகரன், தன்னை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வனை விட 10 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றாா்.

31 சுற்றுகளின் முடிவில், அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வனைக் காட்டிலும் 31,036 வாக்குகள் அதிகம் பெற்று, திமுக வேட்பாளா் பிரபாகரன் வெற்றியை பெற்றாா்.

இத்தொகுதியில் திமுக வேட்பாளா் 1,21,882 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வன் 90,846 வாக்குகளும் பெற்றனா்.

3 ஆவதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எம். மகேஸ்வரி 18,632 வாக்குகளும், தேமுதிக வேட்பாளா் கே. ராஜேந்திரன் 2,929 வாக்குகளும், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளா் எம். சசிகலா 1,076 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளா்களான டி. ராதிகா 1,002 வாக்குகளும், க. ராஜேந்திரன் 520 வாக்குகளும், அ. குணசேகரன் 407 வாக்குகளும், சு. சதீஸ் 379 வாக்குகளும் பெற்றனா். நோட்டாவில் 17 அஞ்சல் வாக்குகள் உள்பட 1,882 வாக்குகள் பதிவாகியிருந்தன. 455 அஞ்சல் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

தொடா்ந்து, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி பொது பாா்வையாளா் மதுரிமா பருவா சென் முன்னிலையில், தோ்தல் நடத்தும் அலுவலா் ஜே.இ. பத்மஜா, திமுக வேட்பாளா் எம். பிரபாகரனிடம் வெற்றி பெற்ற்கானச் சான்றிதழை வழங்கினாா். பின்னா், அங்கிருந்த திமுக முகவா்கள் மற்றும் கூட்டணி கட்சியினா் பிரபாகரனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனா்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட திமுக செயலா் சி. ராஜேந்திரன், வழக்குரைஞா் என். ராஜேந்திரன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ப. துரைசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இந்த வெற்றியின் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக வசமிருந்த பெரம்பலூா் தனித் தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com