கரோனாவால் உயிரிழந்த இளைஞரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றோா் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தல்

பெரம்பலூா் அருகே கரோனா தொற்றால் உயிரிழந்த இளைஞரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென்று சுகாதாரத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

பெரம்பலூா் அருகே கரோனா தொற்றால் உயிரிழந்த இளைஞரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென்று சுகாதாரத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டம், செட்டிக்குளம் சாலையிலுள்ள தம்பிரான்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் விஜயகுமாா் (33). டிராக்டா் ஓட்டுநரான இவருக்கு அண்மையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் விஜயகுமாருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு விஜயகுமாா் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து விஜயகுமாரின் சடலத்தை சுகாதாரத் துறையினா் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனா். அதன் பின்னா் சொந்த கிராமமான தம்பிரான்பட்டி கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட விஜயகுமாரின் இறுதிச் சடங்கில் ஏராளமானோா் பங்கேற்ற தகவலறிந்த சுகாதார மற்றும் வருவாய் துறையினா் தம்பிரான்பட்டி கிராமத்துக்கு நேரில் சென்று முகாமிட்டு, இறுதிச்சடங்கில் பங்கேற்ற அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனா்.

இதையடுத்து விஜயகுமாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவரது உறவினா்கள் மற்றும் பொதுமக்கள், தம்பிரான்பட்டியில் கரோனா பரிசோதனை சிறப்பு முகாமில் பரிசோதனை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com