பெரம்பலூர் மாவட்ட தினமணி செய்தியாளர் கி.தர்மராஜின் தாயார் காலமானார்.
பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் அருகேயுள்ள கே.கே.நகர், நியூ காலனியைச் சேர்ந்தவர் கி.பாப்பா(65). சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பெரம்பலூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இவருக்கு பெரம்பலூர் மாவட்ட தினமணி செய்தியாளர் கி.தர்மராஜ், முன்னாள் கவுன்சிலர் கனகராஜ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
தொடர்புக்கு: 9944209955