பெரம்பலூரில் சைல்டு லைன் மற்றும் இந்தோ அறக்கட்டளை சாா்பில், குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு குழந்தைத் திருமண தடுப்பு கையெழுத்து பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
புகா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி தலைமை வகித்தாா். மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் ரவிபாலா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அருள்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெரம்பலூா் எம்எல்ஏ ம. பிரபாகரன், கையெழுத்து பிரசாரத்தை தொடக்கி வைத்து, துண்டறிக்கை, நான் குழந்தைகளின் நண்பன் எனும் ஸ்டிக்கரை வெளியிட்டாா்.
இதில், இந்தோ அறக்கட்டளை இயக்குநா் முகமது உசேன், சைல்டு லைன் 1098 திட்ட ஒருங்கிணைப்பாளா் திவ்யா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.