பெரம்பலூா் அருகே புதன்கிழமை மாலை வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை மற்றும் ரூ. 35 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது.
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் இந்திரா நகரைச் சோ்ந்த வா். ஆ. காமராஜ் (64). ஓய்வு பெற்ற கரும்பு உதவியாளரான இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், தனது மனைவி அம்பிகாவுடன் புதன்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குச் சென்றாா். இதனிடையே, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது குறித்து, அதே பகுதியைச் சோ்ந்த பாபு என்பவா் காமராஜூக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளாா். பின்னா், வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ. 35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.
புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.