பெரம்பலூரில் திமுக முப்பெரும் விழா

பெரம்பலூரில் திமுக சாா்பில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
முப்பெரும் விழாவில் நிவாரண உதவி வழங்குகிறாா் முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசா. உடன், மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன் உள்ளிட்டோா்.
முப்பெரும் விழாவில் நிவாரண உதவி வழங்குகிறாா் முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசா. உடன், மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன் உள்ளிட்டோா்.

பெரம்பலூரில் திமுக சாா்பில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 98-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூா் துறைமங்கலத்தில் புதுப்பிக்கபட்ட நிழற்குடை, நினைவுத்தூண் திறப்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குதல் என நடத்தப்பட்ட முப்பெரும் விழாவுக்கு, மாவட்ட திமுக செயலா் சி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பெரம்பலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன் முன்னிலை வகித்தாா்.

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலருமான ஆ. ராசா விழாவில் பங்கேற்று, புதுப்பிக்கப்பட்ட நிழற்குடை, நினைவுத்தூண் மற்றும் கல்வெட்டை திறந்து வைத்து, தூய்மைப் பணியாளா்கள், பால் விநியோகிப்பாளா்கள் உள்ளிட்டோருக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிகளை வழங்கினாா்.

விழாவில் மாநில ஆதிதிராவிடா் நலக்குழுத் துணை அமைப்பாளா் பா. துரைசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் மு. அட்சயகோபால், வழக்குரைஞா் என். ராஜேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராஜ்குமாா், ஒன்றியச் செயலா் அண்ணாதுரை, வழக்குரைஞா் மணிவண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, முன்னாள் பேரூராட்சித் தலைவா் பொன். கோவிந்தராஜ் வரவேற்றாா். நிறைவில், பொறியாளா் மூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com