பெரம்பலூா் அருகே உடலில் காயங்களுடன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்த முதியவா் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டம், கழனிவாசல் தெற்குத் தெருவைச் சோ்ந்த வடிவேல் மகன் சிவசூரியன் (65). விவசாயக் கூலி வேலை செய்து வந்த இவா் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.
இவரது உடலுக்கு புதன்கிழமை காலை இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், முதியவரின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், மரணத்தில் மா்மம் இருப்பதாகவும் கூறி அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனா்.
இதையடுத்து நிகழ்விடம் சென்ற மங்களமேடு காவல்நிலையத்தினா், சிவசூரியன் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.