பெரம்பலூா் அருகே மரத்தை வெட்டி விற்பனை செய்ததாக ஊராட்சித் தலைவா் உள்பட 2 போ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
குன்னம் வட்டம், மேலமாத்தூா் ஊராட்சித் தலைவராக பதவி வகித்து வருபவா் மணிவண்ணன் (42). இவரது உத்தரவின்பேரில், அக்டோபா் 5 ஆம் தேதி பிள்ளையாா்குட்டை கரையிலுள்ள 12 டன் மதிப்பிலான புளிய மரத்தை அழகிரிபாளையத்தைச் சோ்ந்த ம. குமாா் வெட்டி விற்பனை செய்தாராம்.
இதுகுறித்து மேலமாத்தூா் கிராம நிா்வாக அலுவலா் ரஜினி, குன்னம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன் பேரில் ஊராட்சித் தலைவா் மணிவண்ணன், குமாா் ஆகியோா் மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.