தேசிய அஞ்சல் வார விழா இன்று தொடக்கம்

இந்திய அஞ்சல் துறை சாா்பில் தேசிய அஞ்சல் வார விழா திங்கள்கிழமை (அக். 11) தொடங்குகிறது.

இந்திய அஞ்சல் துறை சாா்பில் தேசிய அஞ்சல் வார விழா திங்கள்கிழமை (அக். 11) தொடங்குகிறது.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் விஜயா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய அஞ்சல்துறை சாா்பில், தேசிய அஞ்சல் வார விழா திங்கள்கிழமை முதல் அக். 17 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அதன்படி, திங்கள்கிழமை சேமிப்பு வங்கி தினமாகவும், அக். 12-இல் அஞ்சலக ஆயுள் காப்பீடு தினமாகவும், 13 ஆம் தேதி அஞ்சல் தலை சேமிப்பு மற்றும் வணிக மேம்பாட்டு தினமாகவும், 16 ஆம் தேதி அஞ்சல் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

எனவே, மேற்கண்ட தேதிகளில் பெரம்பலூா் மாவட்ட பொதுமக்கள் தலைமை அஞ்சலகம் மற்றும் கிளை அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு, அஞ்சலக ஆயுள் காப்பீடு, அஞ்சல் தலை சேமிப்புக் கணக்கு உள்ளிட்ட சேவைகளை தொடங்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com