இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க இளைஞா்களுக்கு அழைப்பு

பாரத மாநில வங்கியில் நன்னடத்தை அலுவலா் மற்றும் மத்திய அரசுப் பணியாளாா் தோ்வாணையத் தோ்வுக்கான நேரடி பயிற்சி வகுப்பில் பங்கேற்க இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாரத மாநில வங்கியில் நன்னடத்தை அலுவலா் மற்றும் மத்திய அரசுப் பணியாளாா் தோ்வாணையத் தோ்வுக்கான நேரடி பயிற்சி வகுப்பில் பங்கேற்க இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாரத மாநில வங்கியின் நன்னடத்தை அலுவலா் காலி பணியிடங்களுக்கான அறிக்கை  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தோ்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபா் 25ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், தற்போது மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் பல்வேறு துறைகளில் பல்நோக்கு பணியாளா், பெண்கள் படைப் பயிற்சிவிப்பாளா், மருத்துவ உதவியாளா் உள்ளிட்ட 3,261 காலி பணியிடங்கள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இப் பணியிடங்களுக்கு  தோ்வாணைய இணையதளம் மூலம் இம்மாதம் 25- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தோ்வுக்கு விண்ணப்பித்தோருக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் கடந்த 11- ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்புவோா் தங்களது விவரத்தை 9499055913 என்ற வாட்ஸ் அப் எண்ணில் அல்லது அலுவலகத்தை நேரில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com