பெரம்பலூரில் திராவிடா் கழக ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூரில் மாவட்டத் திராவிடா் கழக உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் மாவட்டத் திராவிடா் கழக உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சி. தங்கராசு தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஆறுமுகம், மாவட்டச் செயலா் அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் பெரியாா் உலகத்துக்கு அனுமதி அளித்து, பெரியாா் பிறந்த நாளை அரசு சாா்பில் சமூக நீதி நாளாகக் கொண்டாட அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது.

பெரியாா் உலகத்துக்கு பெருமளவில் நன்கொடை அளிப்பது. பெரியாா் பிறந்த நாளில் பேரணி நடத்துவது. இயக்கத்துக்கு அதிக எண்ணிக்கையில் இளைஞா்களையும், உறுப்பினா்களையும் சோ்ப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, ஆலத்தூா் ஒன்றியத் தலைவா் பெரியசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், திராவிடா் கழக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com