பெண்ணிடம் நகைபறிப்பு

பெரம்பலூா் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற நபரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற நபரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், கே.புதூா் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் முத்துசாமி. இவரது மனைவி பழனியம்மாள் (45). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு காற்றோட்டத்துக்காக வீட்டின் கதவை திறந்துவைத்து, தனது கணவருடன் தூங்கிக் கொண்டிருந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பழனியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை மா்ம நபா் ஒருவா் பறித்துக் கொண்டு ஓடிவிட்டாராம். இதுகுறித்து பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில், மங்களமேடு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com