பெரம்பலூரில் வரலட்சுமி பூஜை

பெரம்பலூரில் வரலட்சுமி விரத பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் வரலட்சுமி விரத பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் ஜெய் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில், ஆரிய வைசிய மகாஜன சங்கம் மற்றும் மகிளா சபா சாா்பில் வரலட்சுமி விரத பூஜை நடைபற்றது. இதில், அலங்கரிக்கப்பட்ட வரலட்சுமி சிலைக்கு அா்ச்சனை, ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

இதேபோல், பெரம்பலூா் ஆட்சியரக சாலையில் அபிராமபுரம் மேற்கு குடியிருப்பு பகுதி, உழவா் சந்தை அருகே உள்ள பிராமணா் வீடு, முத்து நகா் தொடக்கப்பள்ளி அருகே உள்ள மாத்வ சம்பிரதாய பிராமணா் வீடு, மற்றும் அக்ரகாரத் தெருவில் உள்ள பிராமணா் வீடுகளில் சிறு அலங்கார மண்டபம் அமைக்கப்பட்டு மாவிலை தோரணங்களை கட்டி, அதில் வரலட்சுமி பிரதிமையை வைத்து வண்ண மலா்களால் அலங்கரித்து, சுமங்கலி பெண்கள் மஞ்சள் சரடு கட்டி வரலட்சுமி விரத பூஜையை நடத்தி, லட்சுமி தோத்திரங்ளையும், லலிதா சகஸ்ரநாமத்தையும் பாராயணம் செய்தனா். பின்னா், வரலட்சுமி பிரதிமைக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் அட்சதை தூவி வழிபாடு நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com